செந்தமிழ்சிற்பிகள்

ச.வே.சுப்பிரமணியன் (1929 - 2017) 

ச.வே.சுப்பிரமணியன் (1929 - 2017) 

 

அறிமுகம்

ச. வே. சுப்பிரமணியன் (S. V. Subramanian, திசம்பர் 31, 1929 - சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

 

இளமைப் பருவம்

 

இவர் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.

 

பணி

 

1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.

 

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இதுவரை தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் ஒன்று என 60 நூல்களை எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

 

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கினார்.

 

விருதுகள்

 

இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல்.ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.

 

நூல்கள்

 

இலக்கிய நினைவுகள் 1964

சிலம்பின் சில பரல்கள் 1972

இலக்கியக் கனவுகள் 1972

மாந்தர் சிறப்பு 1974

ஒன்று நன்று 1976

அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976

இலக்கிய உணர்வுகள் 1978

கம்பன் கற்பனை 1978

காப்பியப் புனைதிறன் 1979

கம்பனும் உலகியல் அறிவும் 1981

கம்பன் இலக்கிய உத்திகள் 1982

கம்பன் கவித்திறன் 2004

இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984

இலக்கிய வகையும் வடிவும் 1984

தமிழ் இலக்கிய வரலாறு 1999

சிலப்பதிகாரம் மூலம் 2001

சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001

சிலம்பும் சிந்தாமணியும் 1977

திராவிட மொழி இலக்கியங்கள் 1984

இளங்கோவும் கம்பனும் 1986

தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998

தமிழில் விடுகதைகள் 1975

தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003

காந்தி கண்ட மனிதன் 1969

பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982

நல்வாழ்க்கை 1992

மனிதம் 1995

மனமும் உயிரும் 1996

உடல் உள்ளம் உயிர் 2004

தமிழர் வாழ்வில் தாவரம் 1993

கூவநூல் 1980

சிலப்பதிகாரம் தெளிவுரை 1998

சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993

தொல்காப்பியம் தெளிவுரை 1998

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001

திருக்குறள் நயவுரை 2001

திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002

சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002

கானல்வரி உரை 2002

பத்துப்பாட்டு உரை 2002

இலக்கணத்தொகை எழுத்து 1967

இலக்கணத்தொகை சொல் 1970

இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978

வீரசோழியம் குறிப்புரையுடன் 1977

தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978

குவலயானந்தம் சந்திரலோகம் 1979

பிரபந்த தீபம் 1980

தொல்காப்பியப் பதிப்புகள் 1992

மொழிக்கட்டுரைகள் 1974

சங்க இலக்கியம் 2006

மெய்யப்பன் தமிழகராதி 2006

தமிழ் இலக்கண நூல்கள் 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007

பன்னிரு திருமுறைகள் 2007

Descriptive Grammar of Chilappathikaram 1975

Grammar of Akananuru 1972

Studies in Tamil Language and Literature 1973

Studies in Tamilology 1982

Tolkappiyam in English 2004

சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966

 

ச.வே.சுப்பிரமணியன் (1929 - 2017) 

பிறப்பு திசம்பர் 31, 1929

வீரகேரளம்புதூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு

இறப்பு 12 சனவரி 2017 (அகவை 87)

தேசியம் இந்தியர்

கல்வி முனைவர் (கேரளா பல்கலைக்கழகம்)

இளங்கலை(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

பணி பேராசிரியர்

அறியப்படுவது எழுத்தாளர், தமிழறிஞர்

பெற்றோர் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி